Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் கலை கல்லூரியின் சார்பாக ஆன்லைன் சேவைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜுலை 28, 2023 11:46

ராசிபுரம்: ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)யின் கணினி அறிவியல் துறை சார்பில் நீட்டிப்பு செயல்பாடாக ஆன்லைன் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குருக்கபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் சுமார் 10 பேரும் இரண்டு உதவிப்பேராசிரியர்களும் பங்கேற்றனர். அவர்கள் குருக்கபுரம் கிராம மக்களிடையே ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளான மொபைல் வங்கி, இணைய வங்கி சேவை, யு.பி.ஐ –ஆல் செயல்படும் ஜி-பே, போன் பே, பே டி எம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும், மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டும் முறையையும், மேலும் இத்தகைய ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறைத்தலைவர் திரு பி.சுப்ரமணியம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்